• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போட்டியில் 95 வயது பாட்டி ! உ.பி. தேர்தல்

January 25, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேசத்தில் 95 வயது மூதாட்டி சட்டப் பேரவைக் களத்தில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டார்.

மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு 95 வயதான ஜல் தேவி என்ற பாட்டி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுபவர் என்பது வியப்பிலும் வியப்பு.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேராகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

“இந்தத் தள்ளாத வயதில் போட்டியிடக் காரணம் என்ன” என்று கேட்டால், “ஊழலை ஒழிப்பதும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும்தான் எனது நோக்கம். இந்த உடல் அனுமதிக்கும் வரையில் அதற்காகப் பாடுபடுவேன்” என்கிறார் ஜல் தேவி.

“தற்போதைய மாநில அரசு மக்களை ஏமாற்றியும் அவர்களுக்கு எல்லாவித தொல்லைகளையும் தருகிறது. ஆட்சியாளர்களத் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், என்னிடம் இருக்கும் லத்தியை பயன்படுத்த தயங்கமாட்டேன்” என்று கம்பீரமாகப் பேசினார்.

கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலில் 12,௦௦௦ வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க