• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.வி. சிந்து, தோனிக்கு பத்ம விருதுகள்

January 24, 2017 தண்டோரா குழு

இந்திய முன்னாள் கிரிகெட் கேப்டன் எம்.எஸ். தோனி, மற்றும் ரியோ ஒலிம்பிக் பாட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி. சிந்து ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண் பி.வி. சிந்து ஆவார். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்ம விருதைப் பெற போகும் இளம் விளையாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவின் பயிற்சியாளர் பி. கோபிசந்துக்கும் பத்ம விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்படும் பத்ம விருதின் வகை குறித்து குறிப்பிடவில்லை.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் கோபிசந்த் பாட்மிண்டன் அகாதமியை கோபிசந்த் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் அவர் அர்ஜுனா விருது, துரோணாசாரியார் விருது மற்றும் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினத்தன்று பி.வி. சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் இந்திய முன்னால் கேப்டன் தோனி அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க