• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் – ரஜினி வேண்டுகோள்

January 23, 2017 tamilsamayam.com

அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கோரி கடந்த 6 நாட்களாக அறவழியில் நடைபெற்று வந்த போராட்டத்தில், தற்போதைய நிலைமை வேதனை அளிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளின் உறுதியை ஏற்று கண்ணியம் காக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அறவழிப் போராட்டத்திற்கு, சில சமூக விரோத சக்திகள் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ரஜினி, போராட்டத்தின் போது ஆதரவளித்து பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க