• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் – ரஜினி வேண்டுகோள்

January 23, 2017 tamilsamayam.com

அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கோரி கடந்த 6 நாட்களாக அறவழியில் நடைபெற்று வந்த போராட்டத்தில், தற்போதைய நிலைமை வேதனை அளிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளின் உறுதியை ஏற்று கண்ணியம் காக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அறவழிப் போராட்டத்திற்கு, சில சமூக விரோத சக்திகள் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ரஜினி, போராட்டத்தின் போது ஆதரவளித்து பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க