• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏமனில் உள்நாட்டுப் போர், தீவிரவாதிகள் 52 பேர் பலி

January 23, 2017 தண்டோரா குழு

ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான மோதலில் 66 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து ஏமன் நாட்டின் அரசு படைத் தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) கூறுகையில்,

”ஏமன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாப்-அல்-மந்தப் என்னும் இடத்தில் சவூதி நாட்டின் தலைமையில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதில், ஷியா ஹுத்தி போராளிகள் மற்றும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா விசுவாசிகள் 52 பேரும் அரசாங்க படை வீரர்கள் 14 பேரும் உயிரிழந்தனர்” என்றார்.

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், “ஏமன் நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப் போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு சிவில் யுத்தமாக மாறியது. இதில் 1௦,௦௦௦ பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளில் பட்டினி மற்றும் நோயை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க