• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏமனில் உள்நாட்டுப் போர், தீவிரவாதிகள் 52 பேர் பலி

January 23, 2017 தண்டோரா குழு

ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான மோதலில் 66 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து ஏமன் நாட்டின் அரசு படைத் தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) கூறுகையில்,

”ஏமன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாப்-அல்-மந்தப் என்னும் இடத்தில் சவூதி நாட்டின் தலைமையில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதில், ஷியா ஹுத்தி போராளிகள் மற்றும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா விசுவாசிகள் 52 பேரும் அரசாங்க படை வீரர்கள் 14 பேரும் உயிரிழந்தனர்” என்றார்.

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், “ஏமன் நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப் போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு சிவில் யுத்தமாக மாறியது. இதில் 1௦,௦௦௦ பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளில் பட்டினி மற்றும் நோயை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க