• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – கார்த்திகேய சிவசேனாதிபதி

January 22, 2017 தண்டோரா குழு

நாட்டின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை.எனவே போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் அறிவுரையின் பேரில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அவசர சட்டம் வந்திருக்கிறது. இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இதை நமது ஒற்றுமையின் முதல் படியாகக் கொண்டு சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் நீண்ட கால நிரந்தர தீர்வுகளுக்கு பணியாற்ற வேண்டும்.

வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

நாட்டின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை. போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இது போன்ற ஒற்றுமை அவசியம் என்றாலும், இப்போதைக்கு ஜல்லிக்கட்டு தவிர்த்து வேறு பிரச்னைகளுக்கு போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம்.”

இவ்வாறு கார்த்திகேய சேனாபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க