• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணிகட் எக்ஸ்பிரஸின் 1௦ பெட்டிகள் தடம்புரண்டது

January 21, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜனவரி 21) ராணிகட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. நல்ல காலமாக இதில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.

இது குறித்து ராஜஸ்தான் வடமேற்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் தருண் ஜெயின் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

காத் கோதம் – ஜெய்சால்மர் எக்ஸ்பிரஸ் (15௦14) ரயிலின் 1௦ பெட்டிகள் தயாத் ஹமிரா-ஜெய்சால்மர் இடையே வெள்ளிக்கிழமை இரவு 1௦.15 மணியளவில் தடம் புரண்டது.

தகவல் அறிந்த மூத்த ரயில்வே அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பயணிகள் வேறு ரயில் மூலம் தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர். இச்சம்பவத்திற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இதையடுத்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க