• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வான்வெளி தாக்குதலில் 40 தீவிரவாதிகள் பலி

January 20, 2017 தண்டோரா குழு

சிரியாவில் அலேப்போ மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அல்-காய்தாவுடன் இணைந்த ஃபெடே அல்-ஷாம் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான படையும் சிரியா அரசும், அதன் கூட்டாளியான ரஷியாவும் இணைந்து பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்கி வருகின்றனர்.
எனினும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் யார் நடத்தியது என்பது உறுதி செய்யப்படவில்லை என்று மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ரஷியாவும் துருக்கியும் இணைந்து கடந்த டிசம்பர் 30ம் தேதி ஏற்பாடு செய்த போர்நிறுத்தத்திற்கு இந்த பயங்கரவாத அமைப்பு இணங்கவில்லை. அதையடுத்து, விமானத் தாக்குதல்களுக்கு ஆளாகி, சுமார் நூறு தீவிரவாதிகளை இழந்தது இந்த அமைப்பு.

மேலும் படிக்க