• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத்தரம் கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா ஸ்டேடியத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் !

September 23, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச தரத்திலான ஸ்ரீ ‘கிருஷ்ணா விளையாட்டு அரங்கை இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் துவக்கி வைத்தார்.

சர்வதேச தரத்திலான ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு அரங்கம் 2000 பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டுகளைகாணும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரங்கமாகும்.மிக முக்கிய விருந்தினருக்கான பார்வையாளர் மாடத்துடன் கட்டப்பட்ட இந்த விளையாட்டு அரங்கம் 698 சதுரமீட்டர் அளவில் பரந்து விரிந்து இருக்கிறது. சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுஅரங்கில் இரண்டு கூடைப்பந்து மைதானங்களும், செயற்கை தரையுடன் ஒரு கால்பந்து மைதானமும், இரண்டுகைப்பந்து மைதானங்களும்,இரண்டு கிரிக்கெட் பயிற்சி தளங்களும் 400 மீட்டர் நீளமுள்ள எட்டு வழி செயற்கை ஓடு தளத்துடன் அமைந்துள்ளது.

விளையாட்டு அரங்கினை சுற்றிலும் பசும்புல் வெளிகளிடையே அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் இருக்கையில்இருந்து விளையாட்டைப் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவமாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மிக உயர் மின் கோபுரங்களில் இருந்து இரவை பகலாக்கும் ஒளி வெள்ளத்துடன் சர்வதேச தரத்திலான இந்தவிளையாட்டு அரங்கம், இக்கல்லூரி மாணவ மாணவியர்களை துடிப்பான விளையாட்டு வீரர்களாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களை மாநில அளவிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் விளையாட்டு சாதனையாளர்களாக உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நிகழ்ச்சியில் S. மலர்விழி பேசுகையில்,

இது ஒரு நெடுநாள் கனவு இன்று நிஜமாகி உள்ளது என்றார். மேலும் இதைமத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்கள் துவக்கி வைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.

அமைச்சர் பேசுகையில்,

இது போன்ற ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒரு கல்வி நிறுவனத்தில் பார்ப்பது அரிது எனவும், இது போன்ற ஸ்டேடியமை மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம் ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமைக்கு விளையாட்டை, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் உள்ள ஆர்வத்தை காணமுடிகிறது என்றார்.

மேலும் கேலோ இந்தியா யூனிவர்சிட்டி கேம்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துகையில் அதில் சில விளையாட்டு பிரிவுகளில் சில போட்டிகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்டேடியத்தில் நடத்த நிச்சயமாக முயற்சிகள் எடுக்கப்படும் என்றுஉறுதியாக கூறினார்.

மேலும் படிக்க