• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் : ரூ.15.57 கோடி அபராதம் வசூல்

April 21, 2023 தண்டோரா குழு

தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தில் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனைகளில் ரூ.15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கூறியதாவது:

பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் ரயில் மற்றும் ரயில்வே வளாகங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி 2022-23 ஏப்ரல் – மார்ச் மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 2,00,821 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்டறிந்து, அவர்கள் இடமிருந்து ரூ.14.10 கோடி அபராதமாக வசூலித்தனர்.மேலும் 28,998 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.1.43 கோடி வசூலிக்கப்பட்டது. இதேபோல், 558 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இதற்கு அபராதமாக ரூ.3.55 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க