• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.1 லட்சம் மோசடி செய்த இன்ஜினியர் கைது

April 21, 2023 தண்டோரா குழு

கோவை கே.ஆர்.புரம் அருகே முருகன் கோயில் வீதியை செந்தில் வடிவேல் இவர் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் வேலை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பேஸ்புக் மூலம் அறிமுகமான முத்துபாலாஜி என்பவர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அதன் மூலம் அதிக இலாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து செந்தில் வடிவேலுவிடம் இருந்து ஒரு லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் எந்தவித முதலீடும் செய்யாமல், பணத்தையும் திருப்பி தராமல் முத்துபாலாஜி இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த கோவை சைபர் கிரைம் போலீஸாரிடம் செந்தில் வடிவேலு புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று முத்து பாலாஜியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் முத்துபாலாஜி. பி.இ. படித்திருக்கிறார். இவர் குற்ற செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன், 4 சிம்கார்டுகள் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்றனர்.

மேலும் படிக்க