• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சிக்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கல்

April 21, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார். கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகளை எடுப்பதற்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு மேலும் புதிய 176 குப்பை தொட்டிகளுடன் கூடிய 44 தள்ளுவண்டிகளை மத்திய மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர்கள் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இதிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க