• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புரோஜோன் மாலில் பி. எஸ்-2 படத்தில் இடம்பெற்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி

April 14, 2023 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் பயன்படுத்திய ராஜ சிம்மாசனம், மகுடம், கேடயம் மற்றும் ஈட்டி போன்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி இன்று துவங்கியது.

இது குறித்து புரோ ஜோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பி பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயல் இயக்கத் தலைவர் முசாமில், ஆகியோர் கூறும்போது :-

இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து பொருட்களும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இடம் பெற்ற போர்க்கால பொருட்கள் ஆகும். புரோ ஜோன் மால் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது. துவங்கிய இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருள்களும் பிரபல திரைப்பட கலை இயக்குனர் திரு. தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவானவை.

திரைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்த போர் கால பொருட்களை கோவை வாடிக்கையாளர்கள் நேரில் கண்டு ரசிக்க ஒரு வாய்ப்பை புரோஜோன் மால் ஏற்படுத்திக் தந்துள்ளது. இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை வாடிக்கையாளர்கள் இலவசமாக கண்டு செல்பி எடுத்துக் கொள்ளலாம்.கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க