• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்டம் தோறும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி துவங்கப்பட உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

April 7, 2023 தண்டோரா குழு

மாவட்டம் தோறும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி துவங்கப்பட உள்ளதாகவும்,இது குறித்து ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் புதிய ஏ.ஜே.கே. நர்சிங் கல்லூரி துவக்க விழாவில் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா ஏ.ஜே.கே.கல்வி குழுமங்களின் தலைவர் அஜீத் குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து புதிதாக துவங்கப்பட்ட நர்சிங் கல்லூரியை திறந்து வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக முதல்வர் துவக்கி வைத்த இந்த கல்லூரியின் புதிய அங்கமான நர்சிங் கல்லூரியை துவக்கி வைப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும்,நர்சிங் துறையில் வேலை வாய்ப்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறிய அவர், ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் தமிழகத்தில் இருந்து நர்சிங் பயின்று வரும் மாணவ,மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறினார்.

அதற்கு காரணம் அன்னைதெரசாவின் தயாளம் மற்றும் சேவை மனப்பான்மையோடு தமிழக நர்சிங் கல்லூரிகள் மனிதாபிமான முன்னுரிமையில் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் நடைபெறுவதாக கூறிய அவர்,அனைத்து மாவட்டங்களிலும், விரைவில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி துவங்கப்பட உள்ளதாகவும்,இது குறித்து ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,கோவை மாவட்ட சுகாதார துறை இயக்குனர் டாக்டர் அருணா,அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா,மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன்,மருத்துவர் கந்தசாமி,ஏ.ஜே.கே.கல்லூரி முதல்வர் பிருந்தா,ஊராட்சி துணை தலைவர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க