• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்ஸ்டா கிராம் புகழ் கோவை தமன்னாவிற்கு ஜாமீன்

April 6, 2023 தண்டோரா குழு

இன்ஸ்டா கிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியீடு விவாகரத்தில் கைது செய்யப்பட்ட கோவை தமன்னாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை அத்தியாவசிய பண்டங்கள் நீதிமன்றம்.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (25) கோவை கோர்ட் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (22) என்பவர் வெட்டி கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த முக்கிய குற்றவாளிகள் குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்கிற வினோதினி (23) என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக கைது செய்யப்பட்டார். இவரை போலீசார் கைது செய்தனர். சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த இவர் மேலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவர் சமூக வலைதளங்களில் பல்வேறு ஆட்சேபகரமான வீடியோக்கள், ஆயுதங்களுடன் காட்சி தந்த வீடியோக்கள் வெளியிட்டார். போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டார்.

கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அவர் விக்கு னா பேன்ஸ் என்ற பெயரில் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவியது. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் இவரை தேடி வந்த நிலையில் மார்ச் 15ம் தேதி சங்ககிரி பகுதியில் தமன்னா கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தமன்னா என்கிற வினோதினி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை அத்தியவசிய பண்டங்கள் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கியது. மேலும் பீளமேடு காவல்நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரையில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க