• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் இருந்து கோவை வந்த 5 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

April 5, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கு என்று 7579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்திற்கு பெங்களுர் பெல் நிறுவனத்திலிருந்து 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் வரபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இந்த இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன. இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

அப்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குணசேகரன், தனி வட்டாட்சியர்(தேர்தல்) விஜயலெட்சுமி மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க