• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூரில் இருந்து கோவை வந்த 5 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

April 5, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கு என்று 7579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்திற்கு பெங்களுர் பெல் நிறுவனத்திலிருந்து 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் வரபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இந்த இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன. இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

அப்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குணசேகரன், தனி வட்டாட்சியர்(தேர்தல்) விஜயலெட்சுமி மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க