• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.1.7 கோடி மதிப்பிலான 1000 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – கோவை எஸ்.பி.

April 4, 2023

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.இதனை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதை தொடர்ந்து எஸ்.பி.பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிலான 1000 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி பிரிவு அமைத்து மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் செல்போன் மாயமான வழக்குகளை தனியாக கையாண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 330 பேரிடம் நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது. 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல கடந்த 3 மாதங்களில் 126 குற்ற சம்பவங்கள் நடைபெற்று அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 44 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26 வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்க தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 120 கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தனியாக எனக்கு போதை வேண்டாம் என கிளப்கள் துவங்கப்பட உள்ளது. கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சைபர் கிரைம் குற்றச்சம்பங்களில் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இதுவரை ரூ.90 லட்சம் வரை வங்கி கணக்கில் இருந்து மோசடியாக திருடப்பட்டதாக வந்த புகாரில் ரூ.60 லட்சம் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி பெற்று தரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணை வாரண்ட் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 57 பேர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
கேரள கழிவுகளை கோவை மாவட்ட எல்லைகளில் கொட்டப்படுவது தொடர்பாக போலீசார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. மேலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க