• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

March 30, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். செயலாளார் கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்து பி.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்,பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர்.

முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டதற்கு சிறப்பு செய்யப்பட்டது. சிறுதுளி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து காணொளி படம் திரையிடப்பட்டது.இறுதியில் துணை முதல்வர் ஜெயந்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க