• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை -2 பேர் கைது

March 30, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் பசூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (Methamphetamine)-ஐ வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜின்சன் (29) மற்றும் ஷான்சன் (34) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.24,000/- மதிப்புள்ள 8 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் இரண்டு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க