• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வந்தது வந்தே பாரத் ரயில் !

March 30, 2023 தண்டோரா குழு

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் சென்னை, பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் சென்னை – கோவை இடையே வந்தே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டமானது இன்று நடைபெற்றது. அதன்படி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் 11.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

மறு மார்க்கத்தில் பகல் 12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் மீண்டும் சென்னையை வந்தடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி துவக்கி வைத்த பின்னர் நாள் தோறும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கத்தில் கோவையில் பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க