• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமுகையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

March 27, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சிறுமுகை செட்டியார் தோட்டம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சா செடி வளர்த்து வந்த சிறுமுகையை சேர்ந்த யுவராஜ் (38) இடமிருந்து 3.75 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க