• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நீதிமன்றம் அருகே மனைவி மீது கணவன் ஆசிட் வீச்சு

March 23, 2023 தண்டோரா குழு

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (32). இவரது கணவர் சிவா.கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கோவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

இதனிடையே கோவை குற்றவியல் நீதிமன்றம் 2ல் கவிதா இன்று விசாரணைக்காக வந்திருந்தார். அப்போது கணவர் சிவாவும் நீதிமன்றம் வந்துள்ளார்.பின்னர் கவிதா விசாரணை முடிந்து வெளியே வந்த போது நீதிமன்றம் அருகே கணவர் சிவா தண்ணீர் பாட்டிலில் கலக்கி வைக்கப்பட்டிருந்த சல்பியூரிக் அமிலத்தை கவிதா முகத்தில் ஊற்றினார். இதில் காயம் அடைந்த கவிதா அலறி துடித்தார்.

பின்னர் வக்கீல்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவாவை வக்கீல்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவிதா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க