• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேரன் செவிலியர் கல்லூரி இணைந்து வழங்கிய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!

March 17, 2023 தண்டோரா குழு

சேரன் செவிலியர் கல்லூரியுடன், சத்யன் கண் மருத்துவமனை மற்றும் கோயமுத்தூர் க்ளாக்கோமா அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை இன்று நடத்தின.சேரன் செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமில்,கல்லூரி முதல்வர் டாக்டர்.மீனாகுமாரி, சேரன் பார்மசி கல்லூரியின் டீன் டாக்டர். சிவகுருநாதன், சத்யன் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். அருணா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

மேலும், தெலுங்குப்பாளையம், ஆண்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஏதுவாக கல்லூரி சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த முகாமில், கண்புரை, மாறுகண், டயாபடிக் ரெட்டினோபதி, கண்நீர் அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ”ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை உலக க்ளாக்கோமா வாரமாக அனுசரிக்கப்படுகிறது. க்ளாக்கோமா என்னும் கண்நீர் அழுத்த நோய் எவ்வித அறிகுறியின்றி கண் இழப்பை ஏற்படுத்தும். ஆகையால், க்ளாக்கோமா வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகின்றோம்” எனக் கல்லூரி முதல்வர் கூறினார்.

முகாமில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பேசுகையில், ”சென்ற ஆண்டு கண் சிகிச்சை செய்து கொண்டதால், இந்த இலவச முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டேன், என்னுடன் எனது மனைவியும் கண் பரிசோதனை செய்து கொண்டார்” என்றார்.

மேலும் படிக்க