• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேபிட்டோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார்

March 15, 2023 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் அருகே ரேபிட்டோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூயில் இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும் தற்போது வருவாய்க்காக பகுதிநேரமாக ரேபிட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கோவை ரயில் நிலையம் அருகே வாடிக்கையாளர் ஒருவரை அழைக்க வந்த போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ராஜாவிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் ராஜாவை சூழ்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர்,கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனிடம் மனு அளித்தனர். விசாரித்த ஆணையர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க