• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி. எண்ணை தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடி செய்தவர் கைது

March 6, 2023 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த கண்ணன் என்பவர் மஹாலஷ்மி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் தங்கள் நிறுவனத்தின் ஜி.எஸ்.டி. எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

இது தொடர்பாக சீனிவாசன் (47) என்பவரை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், சிவராஜ பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சீனிவாசன் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.அவரிடம் இருந்து மொபைல் போன்கள்,மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம்கார்டுகள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் உள்ள விசிடிங் கார்டுகள் சுமார் – 1500, போலி ரூபாய் தாள்கள் – மதிப்பு சுமார் 5000 ரூபாய், போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறும் போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க