• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலவச கல்வி திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் மனு

March 6, 2023 தண்டோரா குழு

கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் படித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பள்ளியானது மூடப்பட்டதால் குழந்தைகளின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர். அப்போது தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் எனவும் அங்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பெற்றோர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இலவச கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயில்வதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் மீண்டும் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மனு அளிக்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பதாகைகளை ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க