தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.இதனையொட்டி இந்தியா அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள்,கட்சி தொண்டர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் நம்பர் 4. வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியில் புதியதாக கொடிகம்பம் நடப்பட்டு திமுக கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கவுன்சிலர் சித்ரா தேவி, நிர்வாகி உதயணன் முன்னிலையில் நடந்தது. இதில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு