• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கடைக்குள் புகுந்தது – முதியவர் படுகாயம்

February 27, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது.

தொடர்ந்து அந்த பேருந்து கிராஸ்கட் ரோடுக்கு முன்புறம் செல்லும்போது, நஞ்சப்பசாலையில் இருந்து காந்திபுரம் சத்தி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த சிட்டி டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது.

தனியார் பேருந்து அதி வேகமாக வந்து மோதியதில் அரசு பேருந்து காந்திபுரத்தில் உள்ள வணிக வளாகம் மீது இடித்து நின்றது.இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொள்ளுகின்றனர்.

மேலும் படிக்க