• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் -பீகார் இளைஞர்கள் கைது

February 24, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் இன்று ரூ.7,00,000 மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல். மேலும் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் காவல்துறையினர் கோவை சரவணம்பட்டி – துடியலூர் மெயின் ரோடு, ஆறுமுகம் ரைஸ் மில் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் மற்றும் அங்கித்குமார் ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7,00,000 மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் -1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேற்படி சிறப்பாக செயல்பட்டு கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படிக்க