• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது -34.4 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

February 18, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் துடியலூர் பகுதியில் தொடர் வீடு புகுந்து திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

இதன் பேரில் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் தொப்பம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்ததில் துடியலூர் பகுதிகளில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்தவர்கள் என தெரியவந்தது.

கோவில்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான் (20), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (55) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகிய மூன்று நபர்கள் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து காவல்துறையினர் அந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34.4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க