• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி டெலிகால் சென்டர் வைத்து மோசடி – 6000 வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் பறிமுதல்

February 17, 2023 தண்டோரா குழு

கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் கிழக்கு வீதிமில் வசிப்பவர் யுவராஜபாண்டியன். இவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் கோவையில் டி.எஸ். பேங்கிங் சோலியூசன் நிறுவனம் நடத்தி வரும் தினேஷ், தனக்கு இணைய வழி மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தன்னிடமிருந்து ஆதார்கார்டு, பான் கார்டு மற்றும் ஒடிபி விபரங்களை பெற்றுக்கொண்டு தன்னுடைய பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி லோன் பெற்றுள்ளார் என கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தினேஷை இன்று 1 காவல் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் முத்து, சிவராஜ பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பயன்படுத்திய 8 செல்போன்கள், 26 சிம் கார்டுகள், 11 பான் கார்டுகள், 12 ஆதார், 1 வோட்டர் ஐ.டி மற்றும் சுமார் 6000 வாடிக்கையாளர் பற்றிய விபரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறு போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க