• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

February 11, 2023 தண்டோரா குழு

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.

பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் துரைக்கண்ணன், செயலாளர் கோசல் ராம், பொருளாளர் சீதாராமன், இணைச் செயலாளர் த. பரமேஸ்வரன், லயன் ராஜசேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியானது கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மாசாணி மருத்துவமனை முன்பு தொடங்கி ஜே.டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில் ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இவர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பாதகைகளை கையில் ஏந்தி வந்தனர்.அப்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி முதல்வர் லதா, ஒருங்கிணைப்பாளர் சிவமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க