• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரவு நேர வாரச்சந்தைகளை மாலை நேரத்திற்கு மாற்ற வேண்டும்- விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

January 27, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள காரமடை, சோமனூர், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகள் இரவு நேரங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தோற்றம் மற்றும் வீடுகளில் இருந்து சந்தைக்கு வந்து பொருட்களை வாங்க செல்வதற்கு இரவு நேரம் ஆகிவிடுகிறது. எனவே இரவு நேரங்களை தவிர்த்து மாலை நேரங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்களை வாங்க மாலை நேரம் உகந்த நேரம் என்பதால் தற்போது இயங்கி வரும் நேரத்தை மாற்றி அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய விலை நிலங்களை ஒட்டி உள்ள அரசு பூமிகளை நீண்ட நாள் அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு மதிப்பீட்டு அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க