• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரவு நேர வாரச்சந்தைகளை மாலை நேரத்திற்கு மாற்ற வேண்டும்- விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

January 27, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள காரமடை, சோமனூர், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகள் இரவு நேரங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தோற்றம் மற்றும் வீடுகளில் இருந்து சந்தைக்கு வந்து பொருட்களை வாங்க செல்வதற்கு இரவு நேரம் ஆகிவிடுகிறது. எனவே இரவு நேரங்களை தவிர்த்து மாலை நேரங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்களை வாங்க மாலை நேரம் உகந்த நேரம் என்பதால் தற்போது இயங்கி வரும் நேரத்தை மாற்றி அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய விலை நிலங்களை ஒட்டி உள்ள அரசு பூமிகளை நீண்ட நாள் அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு மதிப்பீட்டு அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க