• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூடி கிடக்கும் மத்திய அரசின் தேசிய நூற்பாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

January 24, 2023 தண்டோரா குழு

இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் கார்த்திகேயன் அண்ணாமலை துணைத் தலைவர்கள் ராஜேஷ் பி லந்து. துரைராஜ். சுந்தரம். பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.

மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும் எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும் தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு கொண்டு சென்று கோவை தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கைகளை சண்முகசுந்தரம் எம்பியிடம் முன்வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது பதில் உரையில்,

பாராளுமன்ற உறுப்பினர் தனது பதில் உரையில் கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. அதற்கு சில புள்ளி விவரங்களை முன்வைத்து பேசினார்.

மேலும் படிக்க