• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி

January 20, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் திட்ட பணியாளர்களுக்கு ஆவாரம்பாளையம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வழங்கப்பட்டது.

அப்பயிற்சியில் உணவிற்கான மூலப் பொருள்களை எவ்வாறு வாங்குவது, இருப்பு வைப்பது, மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் தயாரிக்கப்பட்ட உணவை எவ்வாறு கொண்டு செல்லுதல், கையாளுதல் மற்றும் பரிமாறுவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு தன் சுத்தம் பற்றியும் கையுறை, தலையுறை மற்றும் மேலங்கி போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும், உணவுப்பொருளில் கலப்படங்கள் பற்றியும் விரிவாக பயிற்சி கொடுக்கப்பட்டது.

இப்பயிற்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கல்வி குழு தலைவர் மாலதி, மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், எப்.ஓ.எஸ்.டி.ஏ.சி (FoSTaC) பயிற்சியாளர் பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க