• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தாம்ப்ராஸ் மாநாட்டில் மாநாட்டில் மத்திய அரசு நலத்திட்டங்கள் முகாம் துவக்கம்

January 7, 2023 தண்டோரா குழு

கோவையில் பிராமணர்களின் சமூகத்தை மேம்படுத்த தாம்ப்ராஸ் மாவட்ட மாநாடு , 7 வது பதிப்பு இன்று 7 ஆம் தேதி மற்றும் நாளை 8 ம் தேதிகளில் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில், வசிக்கும் பிராமணர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உண்மை நிலையை மதிப்பிட்டு, அவர்களில் எத்தனை பேர் பொருளாதாரத்தில் நழுவு அடைந்து உள்ளனர். என்பது கண்டறியப்பட்டு குறிப்பாக சுய உதவி இல்லாத ஏழைகள் எத்தனை பேர் உள்ளனர். என்பதை கண்டு அறிந்து அவர்களுக்கு உதவுவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாக நடைபெற்று வருகிறது.

இன்றைய மாநாட்டில் மத்திய அரசு நலத்திட்டங்கள் முகாமினை பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கனகசபாபதி துவக்கி வைத்தார் உடன் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் திரு அபினவ் ரங்கசாமி , உடையாம்பாளையம் மண்டல் தலைவர் சசிகுமார், மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அங்கு பங்கு பெற்ற மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிராமணர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க