• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸப் எண் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதி

December 24, 2022 தண்டோரா குழு

கோவையில் சமீபத்தில் அறிமுகமான ஊர் கேப்ஸ் நிறுவனம் தங்களோடு இணைந்து பணிபுரியும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூபாய் பத்துலட்சம் மதிப்பிலான உயிர்காப்பீட்டு சான்றிதழை இலவசமாக வழங்கியது.கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையில் துவங்கப்பட்ட ஊர் கேப்ஸ் நிறுவனம் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு உயிர் காப்பீடு, உணவகம் , ரேஷன் கடை ,ஈட்டிய விடுப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது.

அதன் ஒருபகுதியாக தற்போது , பணிக்கு தவறாமல் வரும் இருபது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் பத்துலட்சம் மதிப்பிலான உயிர் காப்பீடு செய்து அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கியது. இதனை ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோசப் சுரேஷ் சான்றிதழ்களை வழங்கி ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.ஊர் கேப்ஸ் நிறுவனம் முன்னர் அறிவித்தது போல ஓட்டுநர்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் இதனால் ஓட்டுனர்களின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும் என்றும் ஜோசப் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஊர் கேப்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸப் ( 80984 80980 ) என்ற எண் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதியை கோவையில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க