• Download mobile app
20 Aug 2025, WednesdayEdition - 3479
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் 70 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த சீக்கியர்கள் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

April 2, 2016 tamil.oneindia.com

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருக்கும் ஹஸ்திநாக்ரி பகுதியில் உள்ளது பாய் பீபா சிங் சீக்கியர்கள் கோவில்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தானில் இருந்த இந்தியர்கள் கிளம்பிய பிறகு அந்தக் கோவில் மூடப்பட்டது.

கடந்த 70 ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவில் வழிபாட்டிற்காகக் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோவிலைத் திறந்த உடன் சீக்கியர்கள் அங்குப் பூஜை நடத்தினர். இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து உரிமை இயக்கத் தலைவர் ஹாரூன் சரப்தியால் கூறுகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கியர் கோவிலை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கும் சமமான உரிமை அளிக்கப்படுவது தெரிய வந்துள்ளது என்றார்.

கைபர் படுங்க்வா மாகாண முதல்வரின் சிறப்பு உதவியாளர் சர்தார் சுரன் சிங் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவிலைத் திறக்கும் முடிவை எடுத்து சிறுபான்மையினருக்கு உரிய உரிமையை அரசு வழங்கியுள்ளது என்றார்.

கோவிலுக்கு 30 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சுரன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க