• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

24 மணி நேரம் குடிநீர் திட்டம் செயல்பாடு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு

December 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் 24 மணி நேரம் குடிநீர் திட்டம் செயல்பாடுகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் அம்ரூத் திட்டம், 24 மனி நேர குடிநீர் திட்டம் செயல்பாடுகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார். துணை மேயர் வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைத்திட வழிவகை செய்தல், குடிநீரை 24 மணி நேரமும் வழங்குதல், குடிநீரை சேமித்தல், சுகாதாரமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சி, 12 நகராட்சி, 1 பேரூராட்சிகளில் அம்ரூத் திட்டத்தின்கீழ் 24மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து 80க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்கள். இவர்களுக்கு கோவை மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி, வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் -1,2 திட்டம் மற்றும் பில்லூர் -3 திட்ட பணிகள் நடைபெற்று வருவதை விரிவாக எடுத்துரைக்கப்படும்.இந்தியாவில் பூரி மாநகராட்சியில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது கோவை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து பூனே பகுதியிலும் அம்ரூத் திட்டம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 நாள் நடைபெறும் இந்த பயிற்சி மற்றும் கருத்தரங்கை பொறியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகரப்பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க