• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

45 மின்னணு தராசுகள், 9 கை தாராசுகள், 20 எடைக்கற்கள் பறிமுதல்

December 20, 2022 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள்,தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் இணைந்து உக்கடம், புலியகுளம், சவுரிபாளையம், மசக்காளிபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரையிடப்படாத எடைளயவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

136 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 45 மின்னணு தராசுகள், 9 கை தாராசுகள், 20 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது போன்ற ஆய்வு மீண்டும் வரும் 25ம் தேதி நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க