• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

15 போகோ ஹரம் தீவிரவாதிகள் பலி

January 9, 2017 தண்டோரா குழு

நைஜீரியா நாட்டின் யோபே மாநிலத்தின் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாகுதலில் 5 நைஜீரிய ராணுவத்தினர் இறந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 15 போகோ ஹரம் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இது குறித்து அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) கூறியதாவது:

போகோ ஹரம் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டதிட்டங்ககளுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நைஜீரியா நாட்டின் யோபே மாநிலத்தின் புணி யாதி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 நைஜீரிய ராணுவத்தினர் மற்றும் 15 போகோ ஹரம் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

போர்னோ மாநிலத்தின் தலைநகர் மைடிகுரி உள்ளிட்ட பிற பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க