• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கோவையை சேர்ந்த மேஜிக் கலைஞர்

December 15, 2022 தண்டோரா குழு

மேஜிக் கலையில் உயரிய ஆஸ்கர் விருது என அறியப்படும் சர்வதேச மெர்லின் விருதை கோவையை சேர்ந்த மேஜிக் கலைஞர் டிஜோ வர்கீஸ் வென்று சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கோவை குணியமுத்தூர் பகுதியை சேர்ந்த மேஜிக் கலைஞர் டிஜோ வர்கீஸ்.தேசிய,சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை குவித்துள்ள டிஜோ வர்கீஸ் தற்போது மேஜிக் கலையில் ஆஸ்கர் என அறியப்படும் உயரிய விருதான மெர்லின் விருதை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்ற சர்வதேச மேஜிக் கார்னிவல் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1500 மேஜிக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறந்த மேஜிக் நிபுணராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஜோ வர்கீஸிற்கு சர்வதேச மெஜீசியன் சொசைட்டியின் தலைவர் டோனி ஹாசின் மெர்லின் விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் கலைஞராக இந்த உயரிய விருதை பெற்றுள்ள டிஜோ வர்கீஸ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

மேஜிக் கலையில் ஆஸ்கர் என அறியப்படும் மெர்லின் விருதை பெற்றதை மிக்க மகிழ்ச்சியாக கருதுவதாகவும்,இதற்கு உறுதுணையாக இருந்த தமது குடும்பத்தினர் மற்றும் தமது மனைவி பிங்கி வர்கீஸ் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் படிக்க