• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெயிண்டரை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

December 13, 2022 தண்டோரா குழு

கோவை தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54).தொழிலாளி.இவர் கடந்த 2017-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குளம் கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் தொழில் பார்க்கும் பிரபு என்பவரை வாய்தகராறில் கத்தியால் குத்தினார். இதில் பிரபு படுகாயம் அடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கோவை கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி நம்பிராஜன் வழக்கை விசாரித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆறுமுகத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க