• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் – 3 பேர் கைது

December 13, 2022 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் பின் பகுதியில் உள்ள குட்செட் சாலையில் நேற்று உக்கடம் போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1 டன் அளவில் இருந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த அபுதாஹீர் (45), காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஐசக் (35), ராம்பிரபு (40) என்பது தெரியவந்தது. மேலும் ரயிலில் கொண்டு வரப்பட்ட இந்த புகையிலைபொருட்களை விற்பனைக்காக அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர், யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க