• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர், வி.சி.எஸ் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

December 12, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட துடியலூர், வி.சி.எஸ் நகர் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அப்பகுதிகளை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சித்ரா, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி பொறியாளர்கள் ஜெயன்ராஜ், குமரேசன், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க