• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பறிமுதல்

January 9, 2017 தண்டோரா குழு

கணக்கில் காட்டப்படாத 4,807 கோடி ரூபாயையும், 112 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மொத்தம் 1,138 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக 5,184 பெருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

6௦9.39 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத 4,807 கோடி ரூபாயையும், 112 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கு இதுவரை 526 வழக்குகளைப் பரிந்துரை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க