• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருவாய் அலுவலர் முன்னிலையில் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

December 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் பூமிதான நிலவிநியோகம் பெற்று,விவசாயம் செய்து வரும் பயனாளிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் தடையின்றி பெறும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 2ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மின்னிணைப்பு, நிவாரணம், தடையின்மைச்சான்று, கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்படவுள்ளது. இம்முகாமில் அனைத்து பூமிதான நிலவிநியோகதாரர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க