• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குப்பைகளை சாலையில் எறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்க திட்டம்

December 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளும் ஐந்து மண்டலங்களும் உள்ளன.சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் கோவை மாநகராட்சி துணைவிதிகள் படி, வீட்டுக் கழிவுகளை அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி குப்பை மற்றும் அபாயகரமான குப்பை என தரம் பிரிக்காமல் தொடர்ந்து சாலையில் தூக்கி எறிந்து சுற்றுச்சூழலுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே குப்பைகளை சாலையில் எறியக்கூடாது என வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.எனினும் சிலர் குப்பைகளை சாலையில் எறிந்துவிட்டு செல்கின்றனர்.இதனை கண்காணிக்க சிசிடிவி பொருத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் சுகாதார ஊழியர்கள் மூலம் தினமும் தெருக்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு சாலையில் குப்பைகளை எறிந்துவிட்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க