• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய கோவையில் நடைபெற்ற மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி

November 30, 2022 தண்டோரா குழு

பரத நாட்டியம் என்பது தமிழ்நாட்டிற்குரிய ஒரு மிக சிறந்த நடனமாகும்.பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இந்த கலையின் கடவுளாக சிவ பெருமான் இருக்கிறார். இன்றும் பரதம் ஆடும் பலர் முதலில் வணங்குவது நடராஜ பெருமானை தான். இந்தநிலையில் கோவை நவ இந்தியா சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடத்தும் நிறுத்தியா,சந்தியா, பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடன ஆசிரியர் மிருதுளா ராய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கண்ணன், முருகன்,சிவன்,சக்தி உள்ளிட்ட கடவுள்கள் பற்றிய நடன நாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ருசி சர்மா, சுஜாதா நாயர், ராம கொண்டின்யா, சுப்ரியா சிங் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரத நாட்டியம் நிகழ்ச்சியில் மாணவிகள் தங்களது திறமையான நடனத்தின் மூலம் பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தனர்.

மேலும் படிக்க