• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் 11.64 கோடி பேர் பயணம்

November 28, 2022 தண்டோரா குழு

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகளில் 11..64 கோடி பேர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என ஆட்சியர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் சிறப்பு திட்டமாகும். இந்த கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் அன்றாட தேவைகள், கல்வி நிலையங்கள், வேலைக்கு பெண்கள் எளிதாக சென்று வரமுடிகிறது.
இதன்மூலம், மகளிர் மற்றவர்களின் துணையின்றியும், கட்டணமில்லாமலும் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இத்திட்டமானது மகளிர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் 11.57 கோடி மகளிரும், 5.75 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், 32 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும், 66 ஆயிரம் திருநங்கைகளும் என மொத்தம் 11.64 கோடி நபர்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க