• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்

November 17, 2022 தண்டோரா குழு

கோவை கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர் இதனால் கோயில்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம் இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்குவர் சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குருசாமி துணையுடன் மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம் இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று காலை கோவை மாவட்டத்தில் உள்ள பல முக்கிய கோயில்களில் குருசாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர் இதனால் கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் சன்னதியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர் மாலையிட்ட பக்தர்கள் தினமும் காலை குளித்து கோவில்களுக்கு சென்று சரண கோஷம் எழுப்புவர் இதனை எடுத்து பல்வேறு பகுதிகளில் சரண கோஷம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க